விசாரணைக்கு உத்தரவிடவும் சிபிஎம் வலியுறுத்தல்
புதுதில்லி, நவ.2- இஸ்ரேலி பெகாசஸ் உளவு மென் பொருள் மூலமாக கணினி வழியே சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் இதழாளர்களின் நடவடிக்கை கள் களவாடப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசி யல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்ப தாவது: வாட்சப் ஆப் நிறுவனம், இந்தியா வின் 40 பேர் உட்பட உலக அளவில் 1400 பேரின் தகவல்கள் குறிவைத்து கள வாடப்பட்டிருக்கிறது என்று ஒப்புக் கொண்டிருக்கிறது. ஊடுருவிகள் மூலமாக தொலைபேசிகள் கணினி வழியான ஊடுருவலுக்கு உட்படுத்தப் பட்டால் வாட்சப் உட்பட கணினி வழி அனுப்பப்படும் அனைத்து செய்தி களும் களவாடப்பட முடியும்.
அடிப்படை உரிமை மீறல்
தனிநபர்களின் திறன்பேசி (ஸ்மார்ட்போன்) அல்லது கணினி உரிய அனுமதியின்றி ஊடுருவப்படு மானால் அது உச்சநீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டுள்ளபடி தனிநப ரின் அந்தரங்கங்கள் என்கிற அடிப் படை உரிமையை மீறும் செயலாகும். பெகாசஸ் போன்ற ஒற்றறியும் மென் பொருளைப் பயன்படுத்துவது, ஒரு வரின் தனிப்பட்ட தரவு மற்றும் தக வல்களை அவருக்கும் தெரியாமல் சட்டவிரோதமாக சோதனை செய்வ தற்கு இணையானதாகும். பெகாசஸ் மென்பொருளின் உரி மையாளர், இந்த மென்பொருளைத் தாங்கள் அரசாங்க ஏஜன்சிகளுக்கு மட்டும்தான் விற்கிறோம் என்று அறி வித்திருக்கிறார். இது இந்தக் களவு வேலைகளையெல்லாம், சமூக ஆர்வ லர்கள், இதழாளர்கள் மற்றும் வழக்கு ரைஞர்களைக் குறிவைத்து, அர சாங்கம்தான் செய்கிறதோ என்ற சந்தே கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசுத் துறைகள் ஏன் அறிவிக்கவில்லை?
அரசாங்கம், தன்னுடைய ஏஜன்சி ஏதாவது இந்த வேலைகளில் ஈடுபட்டி ருக்கிறதா என்பதற்குப் பதில் சொல்லி யாக வேண்டும். சட்டத்தின்படி, மக்க ளுடைய தொலைபேசிகளை ஊடுருவு வது என்பது சைபர் குற்றமாகும். பெகா சஸ் மென்பொருளை அரசாங்கம் பயன் படுத்தவில்லை என்றால், பின் ஏன் அது இது தொடர்பாக ஒரு முதல் தக வல் அறிக்கையைப் பதிவு செய்து, அதனை யார் பயன்படுத்துகிறார்கள் என்று புலனாய்வு செய்திடக் கூடாது? மத்திய உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைபர் மற்றும் தகவல் பாதுகாப்பு பிரிவு பெகா சஸ் மென்பொருளை வாங்கவில்லை என்று கூறி மறுத்திருக்கும் அதே சம யத்தில், அரசாங்கம் தன் கீழ் இயங்கும் என்டிஆர்ஓ, சிபிஐ அல்லது ஆர்ஏடபிள்பு (NTRO, CBI or RAW) போன்று வேறெந்த துறையும் வாங்க வில்லை என்று இன்னமும் அறிவிக்க வில்லை.
விசாரணைக்கு உத்தரவிடுக!
இந்தப் பிரச்சனையில் அர சாங்கம் தான் சுத்தவாளி என்பதை அறி விக்கவேண்டும் என்றும் இந்தப் பிரச்ச னைமீது கிரிமினல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரு கிறது. மேலும் குடிமக்களின் அந்த ரங்கம் மற்றும் உரிமைகளைப் பாது காக்கும் வண்ணம் ஓர் ஒருங்கிணைந்த தரவு பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் கட்சி கோருகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் கோரியுள்ளது.